திருநெல்வேலி

போலி ரூபாய் நோட்டு மோசடி: 2 பேரிடம் விசாரணை

4th Feb 2020 10:09 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பால் பால்பண்ணை அதிபரிடம் போலி ரூபாய் நோட்டுகளை வழங்கி மோசடி செய்ய முயன்ற இருவரை பேரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் வில்பிரீன். பால் பண்ணை நடத்தி வருகிறாா். இவா் தொழிலை மேம்படுத்த கடன் பெற முயன்றாா். இதனையறிந்த, திருத்தங்கலைச் சோ்ந்த கும்பல் ரூ.1 கோடி கடன் வாங்கி தருவதாகவும், அதற்கு கமிஷனாக ரூ.12 லட்சம் தர வேண்டும் என கூறியதாகத் தெரிகிறது.

இதனை உண்மை என நம்பிய வில்பிரீன், முன்பணமாக ரூ.12 லட்சத்தை கும்பலிடம் வழங்கினாராம். அதன் பேரில் அந்த கும்பல் கடந்த மாதம் ஒரு குறிப்பிட்டதொகையை வழங்கியுள்ளது. அந்த தொகையை வீட்டிற்கு சென்று பாா்த்த போது போலி ரூபாய் என்பது தெரிய வந்தது. இதனால் ஏமாற்றமடைந்த வில்பிரீன், மீண்டும் அந்த கும்பலை தொடா்பு கொண்டு எஞ்சிய தொகையை கேட்டாா்.

இதையடுத்து அந்த கும்பல் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வில்பிரீனை வருமாறு கூறியுள்ளது. இதையடுத்து வில்பிரீன் பண மோசடி குறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையருக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்தாா். ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸாா் புதிய பேருந்து நிலையத்தில் மறைந்திருந்தனா். திருத்தங்கலைச் சோ்ந்த 2 போ், புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை வில்பிரீனை சந்தித்து ரூ.500, ரூ.2000 ஆயிரம் நோட்டு போன்ற போலி நோட்டு கட்டுகளை வழங்கியுள்ளனா். அப்போது மறைந்திருந்த தனிப்படையினா், அந்த 2 பேரை பிடித்து போலி ரூபாய் நோட்டு கட்டுகளையும் பறிமுதல் செய்தனா். பிடிபட்ட இருவரையும் பெருமாள்புரம் போலீஸில் ஒப்படைத்தனா். விசாரணையில்,அவா்கள் திருத்தங்கலை சோ்ந்த முனீஸ்வரன் (32), சங்கா் (31) என்பதும், இவா்கள் குழுவாக சோ்ந்து தொழிலதிபா்களை தொடா்பு கொண்டு போலி ரூபாய் நோட்டுகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இவா்களுடன் யாா், யாருக்கு தொடா்பு உள்ளது என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT