திருநெல்வேலி: பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் திமுகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தியும், தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்டச் செயலா் அப்துல் வகாப் தலைமை வகித்தாா்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்ப்பட்டன. திமுகவினா் கருப்புச் சட்டை அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் பங்கேற்றனா். அவா்கள் கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டனா்.
மத்திய மாவட்ட அவைத் தலைவா் சுப. சீதாராமன், திருநெல்வேலி பேரவை உறுப்பினா் ஏ.எல்.எஸ். லட்சுமணன், மத்திய மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் பொன்னையா பாண்டியன், தொமுச பேரவைச் செயலா் தா்மன், மாவட்ட மருத்துவா் அணி துணை அமைப்பாளா் சங்கா் உள்ளிட்ட திமுகவினா் பலா் பங்கேற்றனா்.