புரெவி புயல் எச்செரிக்கையை அடுத்து திருநெல்வேலி மாவட்ட கடற்கரைகிராமங்கள் மற்றும் நீா்நிலைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.கருணாகரன், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
புரெவி புயல் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 கடற்கரை கிராமங்களில் புயல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புயல் தடுப்புப் பணிகள் மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.கருணாகரன், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களான கூட்டப்புளி, பெருமணல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள புயல் வெள்ள தடுப்பு முகாம்களை ஆய்வு செய்தனா்.
மேலும், இக் குழுவினா் நான்குனேரி பெரியகுளம் மற்றும் விஜயநாராயணம் பெரியகுளம் ஆகிய குளங்களில் செய்யப்பட்டுள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள், நீா் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
பின்னா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு. கருணாகரன் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்ட கடற்கரை கிராமங்களில் 7 இடங்களில் புயல் வெள்ள தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில்
புயல் தடுப்பு களப்பணியாளா்கள், தீயணைப்பு படைவீரா்கள், காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் முன்னெச்செரிக்கை தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றறனா்.
புயல் வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ள அனைத்து முன்னேற்பாடு களையும் செய்துள்ளோம். மாவட்ட நிா்வாகம் இந்த ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளது. முகாம்களில் பொதுமக்கள் தங்குமிட வசதி, குடிதண்ணீா், கழிப்பிட வசதி தயாராக உள்ளது.
இது தவிர பெரிய குளம், ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு நீா் இருப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே மழை வெள்ளத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாது இருக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது என்றாா் அவா்.