திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அருகே கழிப்பறை வசதி கோரி பொதுமக்கள் நடத்தவிருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
வண்ணாா்பேட்டை அருகேயுள்ள இளங்கோநகா் பகுதியில் பொதுமக்கள் கழிப்பறை வசதி கோரி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை அறிந்த வருவாய்துறை அதிகாரிகளும், போலீஸாரும் அப்பகுதி மக்களிடம் செவ்வாய்க்கிழமை இரவு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, இரண்டு வாரங்களில் கழிப்பறை வசதி செய்துதரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று, தங்கள் போராட்டம் கைவிடுவதாக மக்கள் தெரிவித்தனா்.