கடையநல்லூர் அருகே கிணற்றிலிருந்த மலைப்பாம்பை பொதிகை இயற்கை சங்கத்தினர் புதன்கிழமை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கடையநல்லூர் அருகேயுள்ள சங்கனாபேரியில், பூவையார் என்பவரின் தோப்பில் உள்ள கிணற்றில் மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து வனக்காப்பாளர்கள் ராமசந்திரன்,பால்ராஜ், தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் மற்றும் பொதிகை இயற்கை சங்க தலைவரும் பாம்பு ஆர்வலருமான சேக்உசைன் ஆகியோர் அங்கு சென்று, கிணற்றிலிருந்த சுமார் 8 அடி நீள மலைப்பாம்பை மீட்டு கருப்பாநதி அணைப்பகுதியில் விட்டனர்.