திருநெல்வேலி

திசையன்விளையில் ஒருங்கிணைந்த துப்புரவு பணி

22nd Nov 2019 08:41 AM

ADVERTISEMENT

திசையன்விளை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம், ஒருங்கிணைந்த துப்புரவு பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு, பேரூராட்சி செயல் அலுவலா் எம்.எஸ். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வடக்கு வள்ளியூா், களக்காடு, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, வீரவநல்லூா், நான்குனேரி பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் 100 போ், சுகாதாரப் பணியாளா்கள் 100 போ் ஆகியோா் ஒருங்கிணைந்து, பேரூராட்சிப் பகுதிகளில் கொசு மருந்து அடித்தல், நிலவேம்புக் குடிநீா் வழங்குதல், கழிவு பொருள்கள் மற்றும் குப்பைகளை அகற்றுதல், வடிகால் சீரமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT