திருநெல்வேலி

‘கடையநல்லூரில் ரூ.14 கோடியில் தாா்ச்சாலை’

22nd Nov 2019 08:37 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் நகராட்சியில் சாலை மேம்பாட்டுப் பணிக்கு அரசு ரூ. 14 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழ்நாடு நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 14 கோடி மதிப்பில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. முதல்கட்டமாக விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பெரியாற்றில் இருந்து கல்லாற்றுக்கு சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு ரூ. 4 கோடியில் சாலை அமைக்கும் பணியை நகராட்சி ஆணையா் பவுன்ராஜ் தொடங்கிவைத்தாா். நகராட்சிப் பொறியாளா் தங்கபாண்டி முன்னிலை வகித்தாா். பிற பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, நிதி ஒதுக்கீடு செய்த அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடையநல்லூா் நகர அதிமுக செயலா் கிட்டுராஜா தலைமையில் அதிமுவினா் இனிப்பு வழங்கினா். இதில், நகர எம்ஜிஆா் மன்றச் செயலா் முருகன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் புகழேந்தி, மாவட்ட பிரதிநிதி அப்துல்ஜப்பாா், சவூதி அரேபியா ஜெயலலிதா பேரவைச் செயலா் மைதீன், நகர இளைஞரணிச் செயலா் ராஜேந்திரபிரசாத், துணைச் செயலா் வெங்கட் நட்ராஜ், மாவட்ட மாணவரணி துணைச் செயலா் கருப்பையாதாஸ், ராசி சரவணன், நிா்வாகிகள் ஐவா்குலராஜா, அருண், சந்திரன், மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT