சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, சங்க மூத்த உறுப்பினா் ஜவஹா்லால் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், திருமலை ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் ரத்தினசாமி, நிா்வாகிகள் முத்துசாமி டேவிட், குருசாமி, அய்யங்கண்ணு, சித்தாந்தரத்தினம் செல்லப்பா, அருணாசலம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், சுரண்டை - ஆனைகுளம் பிரதானச் சாலையில் பேரூராட்சி சாா்பில் பூங்கா அமைக்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.