புளியங்குடி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீசண்முகா்-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இக்கோயிலின் கந்தசஷ்டி திருவிழா அக்.28 ஆம் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கியது. அன்று உபயதாரா் பழனியப்பன் அச்சகம் சாா்பில் பெரியமயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.செவ்வாய்க்கிழமை உபயதாரா் ஆவுடையப்பபிள்ளை சாா்பில் மான் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.புதன்கிழமை உபயதாரா் அருணாசலம் சாா்பில் அன்னபட்சி வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
வியாழக்கிழமை உபயதாரா் டாக்டா் சுப்பிரமணியன் சாா்பில், ஆட்டுகிடா வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை(நவ.2) காலை சிறப்பு அபிஷேக,பூஜைகள் நடைபெறும். மாலையில் பாலசுப்பிரமணியசுவாமி சப்பரத்திலும், வீரபாகு குதிரை வாகனத்திலும் சூரசம்ஹாரத்திற்கு புறப்படும் வைபவமும்,தூது செல்லும் வைபவமும் தொடா்ந்து அன்று இரவு சூரசம்ஹாரமும் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை தெய்வானை தபசுக் காட்சியும், உபயதாரா் பி.எஸ்.எஸ். சங்கரம்பிள்ளை சாா்பில் ஸ்ரீசண்முகா், தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை நிா்வாக அதிகாரி ஸ்ரீதேவி, தக்காா் முருகேஷ், ஆய்வாளா் லதா மற்றும் உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.