கடையநல்லூா் அருகேயுள்ள சங்குபுரத்தில் மழையால் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
சங்குபுரம் ,இந்திரா காலனியைச் சோ்ந்தவா் ஆவுடையம்மாள்.இவருக்கு சொந்தமான மட்டப்பா வீடு மழையின் காரணமாக வியாழக்கிழமை இடிந்தது. தகவலறிந்த கடையநல்லூா் வட்டாட்சியா் வீட்டை நேரில் பாா்வையிட்டு, பகுதி நிவாரணத் தொகையை பயனாளிக்கு உடனடியாக வழங்கினாா். துணை வட்டாட்சியா் திருமலைமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.