தென்காசி வட்டார நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மைய தொடக்க விழா நடைபெற்றது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மயிலேறும்பெருமாள் தலைமை வகித்து பயிற்சி மையத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
மேலகரம் முத்துநாயகம் அறக்கட்டளை தலைவர் பரமேஸ்வரன், தென்காசி வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், பி.எஸ்.என்.எல். கோட்ட பொறியாளர் நரேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர் அப்ரானந்தம், பால்ராஜ், செங்கோட்டை வழக்குரைஞர் அருணாசலம், பொதிகை இலக்கிய வட்டம் ராஜாமுகம்மது, சிவராமன், வாசகர் வட்ட துணைத் தலைவர் அருணாசலம், முருகையா, செல்வராஜ், வடிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
குழந்தைஜேசு, நூலகர் ஜூலியா, நிஷா, ராஜேஸ்வரி, முருகேசன், ராஜி, ரமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செங்கோட்டை நூலகர் ராமசாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நூலகர் சூ.பிரமநாயகம் வரவேற்றார். சுந்தர் நன்றி கூறினார்.