தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வள்ளியூர் அருகே உள்ள செளந்திரபாண்டியபுரம் அலோசியல் நடுநிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஜி.ஆன்றோ மைக் ஜெர்சன், நிகழாண்டு நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அம்மாணவரை, பள்ளித் தாளாளர் ஜான்சன் ராஜ், உதவி பங்குத்தந்தை செல்வன், பள்ளித் தலைமை ஆசிரியை ஞானம் உள்ளிட்டோர் பாராட்டினர்.