எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வில் சிவசைலம் சாந்தி காதுகேளாதோர் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
காந்தி கிராமம் அறக்கட்டளையின் கிளை நிறுவனமான ஓளவை ஆசிரமம் சார்பில், சிவசைலத்தில் சாந்தி செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வு எழுதிய 10 பேரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதையடுத்து, தாளாளர் சங்கரராமன், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினார்.