சங்கரன்கோவிலில் தாமரைக் கழகத்தின் 389ஆவது சிறப்புக் கூட்டம் நிர்வாகத் தலைவர் மி.அரசமணி தலைமையில் நடைபெற்றது.
அமைப்பின் நிறுவனர் சொ.வீரபாகு, காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், முன்னாள் தலைவர் ஏ.சங்கரசிந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஞா.பால்ராஜ் திருக்குறள் விளக்கமளித்தார். ஆர்.பாண்டிகண்ணு இன்று ஒரு தகவல் அளித்தார். தொடர்ந்து ஏ.எஸ்.கார்த்திகா பேசினார். செயலர் ஏ.எஸ்.ஆறுமுகம் வரவேற்றார். பி.முப்பிடாதி நன்றி கூறினார்.