குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் கலந்தாய்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கல்லூரிச் செயலர் அ.தி.பரஞ்சோதி, முதல்வர் கி.திரிபுரசுந்தரி ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என சென்னை கல்வி கல்லூரி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் அரசு உதவிபெறும் பிரிவுக்கு (ரெகுலர்) மே 13, 14ஆம் தேதிகளில் நடைபெற இருந்த கலந்தாய்வு ஜூன் 3, 4ஆம் தேதிகளில் நடைபெறும். மே 17ஆம் தேதி நடைபெற இருந்த சுயநிதி பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 7ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு www.sriparasakthi.com என்ற கல்லூரியின் இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.