களக்காடு ரத வீதியை சீரமைக்க வலியுறுத்தல்

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதியம்பாள் கோயில் ரதவீதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதியம்பாள் கோயில் ரதவீதியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதியம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இத்திருவிழா மே 9ஆம் தேதி   தொடங்குகிறது. 9ஆம் திருநாளான மே 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 
இந்நிலையில், தேர் ஓடக்கூடிய நான்கு ரத வீதிகளிலும் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. தேரோட்டம் நடைபெற 15 நாள்களே உள்ள நிலையில், சாலை சீரமைப்புப் பணிகள் இதுவரை நடைபெறவில்லை. 
ரத வீதியில் தேர் செல்ல இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com