கடையம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடையம், கல்யாணிபுரம் குடியிருப்புப் பகுதியில் 6 வயதுமுதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள், இடை நின்ற மாணவர்கள் மற்றும் 18 வயதுவரை உள்ள மாற்றுத் திறனுடையோர் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கடையம் வட்டார கல்வி அலுவலர்கள் அ.ஜான்பிரிட்டோ, மகேஸ்வரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ச.உமாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.