திருநெல்வேலி

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

19th Jul 2019 12:43 AM

ADVERTISEMENT


சிவகிரி அருகே மணல் கடத்தியதாக டிப்பர் லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் துரைசிங்கம் தலைமையிலான போலீஸார் உள்ளாருக்கு மேற்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்தபோது, அதை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பியோடிவிட்டனராம்.  இதையடுத்து, அந்த லாரியை போலீஸார் சோதனையிட்டதில், அனுமதியின்றி 3 யூனிட் மணல் ஏற்றிச்செல்வது தெரியவந்தது. மேலும், ஓட்டுநர் கோவில்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், மற்றொருவர் உள்ளாரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பதும் தெரியவந்ததாம்.  இதைத் தொடர்ந்து, மணலுடன் லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT