புளியங்குடி அருகே பாலத்தில் பைக் மோதியதில் காயமடைந்த இளைஞர் திங்கள்கிழமை இறந்தார்.
சிங்கிலிபட்டி, புது காலனியைச் சேர்ந்த சசி மகன் பன்னீர்செல்வம் (24). லாரி ஓட்டுநரான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு சிங்கிலிபட்டியிலிருந்து, புளியங்குடிக்கு பைக்கில் சென்றபோது, புன்னையாபுரம் அருகே பைக் நிலைதடுமாறி பாலத்தில் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு திங்கள்கிழமை அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.