சீவலப்பேரி அருகே மின்சாரம் பாய்ந்து 7ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
சீவலப்பேரியை அடுத்த பொட்டல்நகரைச் சேர்ந்தவர் மூக்கன் என்ற முருகன். இவரது மகள் சந்தியா(12). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் திங்கள்கிழமை இவருடைய வீட்டின் அருகிலுள்ள ஆள்துளைக் கிணறு மோட்டாரை இயக்குவதற்காக மாணவி சந்தியா சென்றுள்ளார். அப்போது அவர் மீது எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.