கடையநல்லூர் கோட்டம், விஸ்வநாதப்பேரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக சிவகிரி, ராயகிரி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16)மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதப்பேரி, தெற்குச்சத்திரம், வடக்குச்சத்திரம், வழிவழிக்குளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி ஆகிய கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோட்டச் செயற்பொறியாளர்(விநியோகம்)இரா. நாகராஜன் தெரிவித்துள்ளார்.