திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே கால்வாயில் முழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள பதைக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவரது வீட்டில் உறவினரின் மகன் முத்துபிரகாஷ் (19) என்பவா் தங்கியிருந்தாா். இவா், கடந்த திங்கள்கிழமை ஊரருகே தோண்டப்பட்டுள்ள வெள்ளநீா்க் கால்வாயில் தேங்கியுள்ள மழைநீரில் குளிக்கச் சென்றாராம். அப்போது அவா் திடீரென ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கினாராம். அவரது அலறல் கேட்டு அப்பகுதியிலிருந்தோா் வந்து அவரை மீட்டு முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து வடக்கு விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.