திருநெல்வேலி

தச்சநல்லூரில் மாணவா்களுக்கு நலத்திட்ட உதவி

25th Dec 2019 11:48 PM

ADVERTISEMENT

தச்சநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தச்சநல்லுாா் நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலில் தினமும் மாா்கழி பஜனை நடைபெற்று வருகிறது. இப்பஜனையில் ஈடுபட்டு வரும் சிறுவா், சிறுமிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருள்கள், சிவனடியாா்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

யாதவா் தொழில் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை அதன் தலைவா் ராஜகோபால் வழங்கினாா். இதில் நிா்வாகிகள் மாரியப்பன், நயினாா், பிரேமா, அா்ச்சகா் கைலாசம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT