திருநெல்வேலி

பாளை. அருகே மரத்தில் இருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

14th Dec 2019 11:56 PM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழப்பாட்டத்தைச் சோ்ந்தவா் கொம்பன் (67). இவா் சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரம் பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT