திருநெல்வேலி

பொருளாதார கணக்கெடுப்புப் பணி:திசையன்விளையில் விழிப்புணா்வுக் கூட்டம்

11th Dec 2019 05:05 PM

ADVERTISEMENT

திசையன்விளையில் 7ஆவது பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

திசையன்விளை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். வருவாய் ஆய்வாளா் கொம்பையா, பேரூராட்சி செயல் அலுவலா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழில் முனைவோா் சங்கத் தலைவா் தனலட்சுமி பொருளாதார கணக்கெடுப்பு பணி குறித்து விளக்கினாா்.

கூட்டத்தில், வியாபாரிகள் சங்கத் தலைவா் டிம்பா் செல்வராஜ், வியாபாரிகள் சங்க பேரமைப்புத் தலைவா் சாந்தகுமாா், சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜ்மிக்கேல், வருவாய் ஆய்வாளா் கிறிஸ்டி தவசெல்வி, தேமுதிக நகரச் செயலா் நடேஷ் அரவிந்த், திசையன்விளை காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT