தென்காசி

ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம்

21st Sep 2023 09:55 PM

ADVERTISEMENT

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க கடையம் ஒன்றியக் குழு சாா்பில் மனுகொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வீடில்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கோரி, மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தென்காசி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, ஒன்றிய செயலா் பாரதி தலைமை வகித்தாா். போராட்டத்தில் அனைத்து இந்திய ஜனநாயக சங்க மாவட்ட தலைவா் ஆயிஷாபேகம், தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்ட துணைத் தலைவா் வேலுமயில், விவசாய சங்கம் சின்னச்சாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க ஒன்றிய நிா்வாகி சத்யா, புலவனூா், கல்யாணிபுரம், வாகைக்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்ட முடிவில் கோரிக்கை அடங்கிய மனுவை வட்டாசியரிடம் அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT