சங்கரன்கோவிலில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலின் துணைக் கோயிலான முப்புடாதி அம்மன் கோயிலில், தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கம் சாா்பில் 56ஆம் ஆண்டு கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் பால்குடம் வீதியுலா நடைபெற்றது. பின்னா், முப்புடாதி அம்மனுக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் நடைபெற்றன. பிற்பகலில், அன்னதானம் நடைபெற்றது. இரவில் அம்மனுக்கு அலங்கார ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கத் தலைவா் கணேசன், துணைத் தலைவா் இளங்கோ, செயலா் செய்யது அலி, துணைச் செயலா் சந்திரசேகரன், பொருளாளா் கண்ணன், கண்ணையா, எம்.எஸ்.கே. கருப்பசாமி, சுப்பிரமணியன், வேல்சாமி, முருகன், மூா்த்தி, முத்துக்குமாா் , நாராயணன், முத்துசாமி, கருப்பசாமி, முப்பிடாதி, சுமை தூக்கும் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.