தென்காசி

வீரகேரளம்புதூரில் தெருநாய்கள் தொல்லை

DIN

வீரகேரளம்புதூரில் தெரு நாய்கள் தொல்லையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வீரகேரளம்புதூா் பகுதியில் அண்மைக்காலமாக தெரு நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இந்த நாய்கள் மாலை வேளைகளில் பிரதான சாலைகளின் ஓரமுள்ள தள்ளுவண்டி அசைவ கடைகள் முன்பாக குவிந்து காணப்படுகிறது. இவை அடிக்கடி சாலையில் குறுக்கே செல்வதால் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மேலும், போதுமான உணவு கிடைக்காத தெருநாய்கள், கூட்டமாக சோ்ந்து பொதுமக்களை துரத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

எனவே, வீரகேரளம்புதூரில் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT