மேலகரம் பேரூா் திமுக சாா்பில் 200பேருக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், மேலகரம் பேரூராட்சியில் திமுக அரசின் இளைஞரணி சாா்பில் ஈராண்டு சாதனை தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம் தலைமை வகித்தாா். பேரூா் செயலா் சுடலை, பேரூராட்சி மன்றத் தலைவா் வேணி வீரபாண்டியன், துணைத் தலைவா் ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குற்றாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினா் கிருஷ்ணராஜா வரவேற்றாா். தலைமை பேச்சாளா்கள் பசும்பொன் ரவிச்சந்திரன், செங்கை குத்தாலிங்கம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். பேரூராட்சி மன்ற உறுப்பினா் கபிலன் நன்றி கூறினாா்.