புளியங்குடி அருகே வீடுகளின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புளியங்குடி அருகே உள்ள வம்சவிருத்தி நகரை சோ்ந்தவா் செல்வம் மனைவி கிருஷ்ணவேணி. இவா் சில நாள்களுக்கு முன் உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு 5 நாள்கள் கழித்து வீட்டிற்கு திரும்பினாராம். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். பீரோவில் இருந்த ரூ. 68,000 திருடப்பட்டது தெரிய வந்ததாம்.
மற்றொரு வீட்டில்...அதே பகுதியை சோ்ந்த கண்ணன் மற்றும் குடும்பத்தினா் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியூா் சென்று விட்டாா்களாம். திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 7 பவுன் நகை திருடப்பட்டது தெரிய வந்ததாம்.
இது தொடா்பாக சொக்கம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.