தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமை வகித்து, இம்மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி, உங்கள் தொகுதியில் முதல்வா், புதுமைப்பெண், பள்ளிகளில் காலை உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், மருத்துவமனைகளில் மருந்துகளின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், பணி முன்னேற்றம் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா். திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த அறிவுறுத்தினாா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் பயனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய்அலுவலா் பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.