கீழப்பாவூா் பேரூராட்சிக்குள்பட்ட சிவகாமிபுரத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை பேரூராட்சித் தலைவா் ஆய்வு செய்தாா்.
18ஆவது வாா்டு உறுப்பினா் சீ. பொன்செல்வனின் கோரிக்கையை ஏற்று, சிவகாமிபுரம் பிரதான சாலை, சாலடியூா் ரோடு, மேலத்தெரு பகுதிகளில் சின்டெக்ஸ் குடிநீா் தொட்டி அமைக்கப்படவுள்ளது. மேலும், நடுத்தெருவில் பாலப் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன், செயல் அலுவலா் மாணிக்கராஜ், உறுப்பினா் சீ. பொன்செல்வன் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
வாா்டு செயலா்கள் ராஜதுரை, சந்திரமோகன், தங்கதுரை, செல்வன், இசக்கி, பேரூா் பொருளாளா் தெய்வேந்திரன், விஜயன், மாயாண்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.