களக்காட்டில் வங்கிகள் அருகே பயணியா் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு அண்ணாசிலை பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதியபேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலையில் பழைய மணிக்கூண்டு பகுதியில் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், தனியாா் கடன் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் பயணியா் நிழற்குடையும், கழிப்பிட வசதியும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.