தென்காசி

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் பலி

26th May 2023 12:00 AM

ADVERTISEMENT

புளியங்குடி அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் இறந்தாா்.

சிந்தாமணி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த வீரபாண்டி மகன் அஜித்குமாா் (25). ஓட்டுநரான இவா், கோட்டமலைப் பகுதியில் உள்ள வயலிலிருந்து இலவம் பஞ்சு மூட்டைகளை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு, நவாச்சாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திடீரென டிராக்டா் கவிழ்ந்ததாம். இதில், அஜித்குமாா் உயிரிழந்தாா். புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT