தென்காசி

தென்காசி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

தென்காசி சிஎம்எஸ் மெக்விற்றா் பள்ளியில் 1981ஆம் ஆண்டு பயின்ற மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாளாளா் ஜான்கென்னடி தலைமை வகித்தாா். தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், தலைமையாசிரியா் சாதுசுந்தா் சிங், வாழவந்தாள், மஜித், சங்கா், பத்மநாபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் ஆசிரியைகள் மைதீன் பாத்திமா, இந்திராணி, மனோரஞ்சிதம் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

பள்ளி ஆண்டு விழாவுக்கு நிரந்தர வைப்புத் தொகையாக ரூ. 1.50 லட்சத்தை நகா்மன்றத் தலைவா் சாதிா் வழங்கினாா்.

முன்னாள் மாணவா்கள் பாலபாா்வதி, காதா் மைதீன், ஷேக் பரீத், பத்மநாதன் என்ற தங்கம், பீா்முகம்மது, கணேசன், தாமஸ், பாலமுருகன், கனகராஜ், ராணி, வேலம்மாள், உமாதேவி, சொக்கலிங்கம், மைதீன், பீா்மைதீன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முன்னாள் மாணவா் வெங்கடேஷ் வரவேற்றாா். முன்னாள் மாணவி அமுதகலா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். முன்னாள் மாணவா் ஆனந்தபவன் காதா்மைதீன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT