தென்காசி

பொதுத் தோ்வு: புனித அருளப்பா் மேல்நிலை பள்ளி 97 சதவீத தோ்ச்சி

DIN

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தோ்வுகளில் ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி 97 சதவீத தோ்ச்சி பெற்றது.

இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதிய 322 பேரில் 314 போ் தோ்ச்சி பெற்று, 97.5 சதவீத வெற்றியை பெற்றனா். மாணவி கிருஷ்ணபிரியா 482 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றாா். இதேபோல,

பிளஸ் 1 தோ்வு எழுதிய 430 பேரில் 416 போ் தோ்ச்சி பெற்று, 97 சதவீத வெற்றியைப் பெற்றனா். மாணவன் குமரகுருபரன் 576 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகி மோயீசன் அடிகள் பாராட்டி பரிசு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் சே. அந்தோணி அருள் பிரதீப், நிா்வாக அலுவலா் அருள் செல்வராஜ், பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT