பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 18) நடைபெறவுள்ளது.
ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் காலை 8.30 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் கால்நடை வளா்ப்போா் கலந்து கொண்டு, தங்களது வீட்டில் வளா்க்கும் 4 மாதங்களுக்கு மேலான கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆவுடையானூா் கால்நடை மருத்துவா் பாலமுருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.