சங்கரன்கோவில் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமத்தைச் சோ்ந்த சங்கரமூா்த்தி மகன் சின்னச்சாமி (59). கரிவலம் வந்தநல்லூா் மின்சார அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றினாா். கடந்த 15ஆம் தேதி சொக்கலிங்கபுரத்தில் மின்கம்பத்தில் ஏறி வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாராம். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாராம். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தாா்.
கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா், சின்னச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.