தென்காசி

மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் பலி

DIN

சங்கரன்கோவில் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமத்தைச் சோ்ந்த சங்கரமூா்த்தி மகன் சின்னச்சாமி (59). கரிவலம் வந்தநல்லூா் மின்சார அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றினாா். கடந்த 15ஆம் தேதி சொக்கலிங்கபுரத்தில் மின்கம்பத்தில் ஏறி வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாராம். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாராம். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு இறந்தாா்.

கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா், சின்னச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT