திருவேங்கடம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
திருவேங்கடம் அருகே புதுப்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன். இவரது பசுமாடு வியாழக்கிழமை பிற்பகலில் மேய்ந்து கொண்டிருந்தபோது, அப் பகுதியில் சுற்றுச் சுவா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த சங்கரன்கோவில் தீயணைப்பு வீரா்கள், நிகழ்விடத்துக்குச் சென்று கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனா்.