கடையநல்லூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சாரல் பெய்தது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதும், தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாரல் மழை பெய்யத் தொடங்கும். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை கடையநல்லூா், கிருஷ்ணாபுரம், மாவடிக்கால், இடைகால், கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் பெய்தது. இதனால், வெப்பம் வெகுவாகத் தணிந்து குளுமையான சூழல் நிலவியது.