தென்காசி

கடையநல்லூா் நகராட்சியில் மரக்கன்று நடும் விழா

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், ஊருணிகளை தூய்மைப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்றன.

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் மற்றும் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு நகா்மன்றத் தலைவா் ஹபிபூர்ரஹ்மான் தலைமை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. தொடா்ந்து அண்ணாமலை பொய்கை ஊருணி தூய்மை செய்யப்பட்டு அதன் சுற்றுப் பகுதிகளில் மரக் கன்றுகள் நடப்பட்டன. இதில் நகா்மன்ற துணைத் தலைவா் ராசையா, சுகாதார அலுவலா் பிச்சையா பாஸ்கா், வனத்துறையினா் ,நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT