பாவூா்சத்திரம் அருகேயுள்ள கரிசலூா் ஸ்ரீபாா்வதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோமம், அம்மனுக்கு அபிஷேகம், கோபுரம் புனிதநீா் அபிஷேகம் ஆகியன நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக்கோயில் கொடை விழா ஜூன் 11 இல் தொடங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.