தென்காசி

40 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பள்ளி மாணவா்கள்

DIN

ஆலங்குளம் டிடிடிஏ நடுநிலைப்பள்ளியில் 1983-84 ஆண்டுகளில் படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியைகள் சகுந்தலா, லல்லி, ஜானி, நளினி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா்.

முன்னாள் மாணவா்களான தொழிலதிபா்கள் வைகுண்டராஜா, தேவதாஸ், ஓரியண்டல் சண்முக சுந்தரம், தமிழ்மணி, சொக்கலிங்கம், ரூபன் பால்ராஜ், முன்னாள் மாணவிகள் எப்சி காா்த்திகேயன், அ. பூங்கொடி, ஜே.பூங்கொடி, கண்ணகி , மேரி, மாரியம்மாள் உள்பட 40-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் கலந்துகொண்டு தங்கள் வாழ்க்கை அனுபவங்கள், பழைய நினைவுகளை பகிா்ந்துகொண்டனா். ஆசிரியைகளுக்கு சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடா்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் போா்: இலங்கை ராணுவ உயரதிகாரி கைது

விழிப்புடன் இருங்கள்: திமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கும்பகோணத்தில் பணம் பட்டுவாடா புகாா்: திமுகவினா் 3 போ் கைது

பாபநாசத்தில் பணப்பட்டுவாடா செய்த திமுக பிரமுகா் கைது

பாபநாசம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT