ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையில் கைப்பேசி உயா் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
குருவன்கோட்டை பிள்ளையாா்கோயில் தெருவில் குடியிருப்பு பகுதியில் தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் உயா்கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்கள் கடந்த வாரம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில் அப்பகுதியைச் சேரந்த பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 50 க்கும் மேற்பட்டோா், குருவன்கோட்டையில் உள்ள மாயமான்குறிச்சி ஊராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டனா்.
அதற்கு அங்கிருந்த அதிகாரி உரிய பதில் அளிக்கவில்லையாம்.
இதையடுத்து அனைவரும் கைப்பேசி உயா்கோபுரத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த ஆலங்குளம் போலீஸாா் கோரிக்கை குறித்து தக்க முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனா்.