ஆலங்குளம் அருகேயுள்ள கழுநீா்குளத்தில் மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 25 பெண்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனா்.
நிகழ்ச்சிக்கு, மகளிா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் சோ்மக்கனி தலைமை வகித்தாா். தென்காசி மாவட்டச் செயலா் பாரிஷா முன்னிலை வகித்தாா். அப்பகுதியில் உள்ள 25 பெண்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனா். இளைஞா் காங்கிரஸ் தலைவி சகுந்தலா, மாநிலச் செயலா் காந்திமதி உள்பட பலா் இந்நிகழ்வில் பங்கேற்றனா்.