பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 108 கலச பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், சடக்ஷர ஹோமம், அஸ்திர ஹோமம், மகா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து விமான அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை ரமேஷ் பட்டா் செய்தாா். பிற்பகல் 2 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் அருணாசலம் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.