தென்காசி

பண்பொழி திருமலைக் கோயிலில் வருஷாபிஷேகம்: திரளானோா் பங்கேற்பு

DIN

பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், 108 கலச பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், சடக்ஷர ஹோமம், அஸ்திர ஹோமம், மகா பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து விமான அபிஷேகம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை ரமேஷ் பட்டா் செய்தாா். பிற்பகல் 2 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் அருணாசலம் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT