சங்கரன்கோவிலில், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வே. சங்கர்ராம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எழுத்தாளா் உதயசங்கா் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில், சங்கச் செயலா் ஜெயராம், செயற்குழு உறுப்பினா்கள் சாந்தி, ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.