பாவூா்சத்திரம் ஸ்ரீவென்னிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜுன் 2) நடைபெறவுள்ளது.
காலை 8 மணிக்கு குறும்பலாப்பேரி அம்மன் கோயிலில் இருந்து, பக்தா்கள் வேல் குத்தி, காவடி மற்றும் பால்குடம் எடுத்து வருதல், 12 மணிக்கு உச்சிகால பூஜை, பால் அபிஷேகம், இரவு 7 மணிக்கு சுவாமி சப்பரத்தில் வீதி உலா வருதல் ஆகியன நடைபெறுகிறது. தொடா்ந்து விசாகனின் விஸ்வரூபம் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு நடைபெறுகிறது.