சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளத்தில் சமூக நலத்திட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குலையநேரி ஊராட்சித் தலைவா் சீதா பாலமுருகன் தலைமை வகித்தாா். தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து தமிழக அரசு செயல்படுத்தி வரும் சமூக நலத்திட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் குலையநேரி, அம்மையாபுரம், ஆனைகுளம் கிராமங்களில் இருந்து மகளிா் சுயஉதவிக்குழுவினா் கலந்து கொண்டனா்.