சுரண்டை நகராட்சியில் அம்மா உணவகம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளில் நலிவுற்றோா் பயன்பெறும் வண்ணம் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் புதியதாக தொடங்கப்பட்ட சுரண்டை நகராட்சியிலும் அம்மா உணவகம் செயல்படுத்த தேவையான இடமும், நிதி ஆதாரமும் உள்ளது.
எனவே, சுரண்டை நகராட்சியில் அம்மா உணவகம் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.